search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உகாண்டாவில் வெள்ளம்
    X
    உகாண்டாவில் வெள்ளம்

    உகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி

    உகாண்டா நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    கம்பாலா:

    ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உகாண்டா நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின்  பண்டிபுஹ்யா மாவட்டத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களை மீட்டனர். 

    மேலும், சிலர் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் சிரொன்கோ மற்றும் புடுடா மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×