என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து - 5 பேர் பலி
Byமாலை மலர்7 Dec 2019 6:49 AM GMT (Updated: 7 Dec 2019 6:49 AM GMT)
ஸ்லோவாக்கியா நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்.
பிரடிஸ்லாவா:
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய நாடு ஸ்லோவாக்கியா. இந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ப்ரெசொவ் நகரில் உள்ள 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து முதல் 5 தளங்களில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 5 நபர்களின் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். 40 பேர் இந்த விபத்தினால் காயமடைந்துள்ளனர்.
மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X