என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Byமாலை மலர்6 Dec 2019 2:53 PM GMT (Updated: 6 Dec 2019 2:53 PM GMT)
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பென்சகோலா பகுதியில் அந்நாட்டு கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த கடற்படை தளத்தில் இன்று நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கு பணியில் இருந்து வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். மேலும், வேறு சிலர் கடற்படை தளத்திற்குள் மறைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X