என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி
Byமாலை மலர்6 Dec 2019 9:17 AM GMT (Updated: 6 Dec 2019 9:17 AM GMT)
அமெரிக்காவில் தேசிய பாதுகாப்புப்படைக்குச் சொந்தமான 'பிளாக் ஹாக்' ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் மின்னிபோலிஸ் பகுதியில் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப்படைக்குச் சொந்தமான ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
யு.எச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் பராமாரிப்பு சோதனை ஓட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தது. அதில் மினிசோட்டா தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் இருந்தனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, மின்னிபோலிஸ் நகரிலிருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள செயின்ட் கிளவுடு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டர் இருந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.
‘மினிசோட்டா தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தாருக்கும் நமக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என தேசிய பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X