என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் - 4 பேர் பலி
Byமாலை மலர்3 Dec 2019 4:54 PM GMT (Updated: 3 Dec 2019 4:54 PM GMT)
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் காரணமாக பெய்துவரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் டிசோய் என பெயரிடப்பட்ட சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் காற்றுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது.
டிசோய் புயல் காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், மணிலாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு 300-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள புயல் வரும் வியாழக்கிழமை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X