என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா அரசு குறித்து விமர்சனம் - அமெரிக்க இளம்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கு நீக்கம்
Byமாலை மலர்28 Nov 2019 7:59 PM GMT (Updated: 28 Nov 2019 7:59 PM GMT)
சீனா அரசு குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக அமெரிக்க இளம்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கை டிக்டாக் நிறுவனம் நீக்கியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் பெரோசா அசிஸ் (வயது 17). இவர் தனது ‘டிக்டாக்’கில் அழகு குறிப்புகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அப்படி ஒரு வீடியோ அழகு குறிப்புகளோடு சீனா குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ‘‘சீனாவில் சிறுபான்மையினர்களாக உள்ள உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். உடனடியாக உங்கள் தொலைபேசியில் இதுகுறித்துத் தேடுங்கள்’’ என்று பேசியிருந்தார்.
இதன் காரணமாக அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. சுமார் 15 லட்சம் பேர் அந்த வீடியோ பார்த்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது. இதற்கிடையே பெரோசா அசிசின் கணக்கை டிக்டாக் நிறுவனம் நீக்கியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிக்டாக் நிறுவனத்துக்கு எதிரான கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் பெரோசா அசிசின் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்கு ‘டிக்டாக்’ நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதே சமயம் அவர் உய்குர் முஸ்லிம்களை பற்றி கூறியதற்காக அவரது கணக்கு நீக்கப்படவில்லை என்றும் ‘டிக்டாக்’கின் விதிகளை மீறும் வகையில் பின்லேடன் பற்றி வீடியோ வெளியிட்டதற்காக நீக்கம் செய்யப் பட்டது என்றும் ‘டிக்டாக்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் பெரோசா அசிஸ் (வயது 17). இவர் தனது ‘டிக்டாக்’கில் அழகு குறிப்புகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அப்படி ஒரு வீடியோ அழகு குறிப்புகளோடு சீனா குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ‘‘சீனாவில் சிறுபான்மையினர்களாக உள்ள உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். உடனடியாக உங்கள் தொலைபேசியில் இதுகுறித்துத் தேடுங்கள்’’ என்று பேசியிருந்தார்.
இதன் காரணமாக அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. சுமார் 15 லட்சம் பேர் அந்த வீடியோ பார்த்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது. இதற்கிடையே பெரோசா அசிசின் கணக்கை டிக்டாக் நிறுவனம் நீக்கியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிக்டாக் நிறுவனத்துக்கு எதிரான கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் பெரோசா அசிசின் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்கு ‘டிக்டாக்’ நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதே சமயம் அவர் உய்குர் முஸ்லிம்களை பற்றி கூறியதற்காக அவரது கணக்கு நீக்கப்படவில்லை என்றும் ‘டிக்டாக்’கின் விதிகளை மீறும் வகையில் பின்லேடன் பற்றி வீடியோ வெளியிட்டதற்காக நீக்கம் செய்யப் பட்டது என்றும் ‘டிக்டாக்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X