search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பூனையுடன் உரிமையாளர்
    X
    5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பூனையுடன் உரிமையாளர்

    அமெரிக்காவில் தொலைந்து 5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பூனை

    அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகரை சேர்ந்த விக்டர் உசோவ் என்பவரின் தொலைந்து போன பூனை 5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருப்பது வியப்பளிப்பதாக விக்டர் கூறியுள்ளார்.
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகரை சேர்ந்த விக்டர் உசோவ், பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சாஷா என பெயரிடப்பட்ட அந்த பூனை மீது அதிக அன்பு வைத்திருந்த விக்டர், அதனை தன் நண்பராக கருதி கவனித்து வந்தார். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டில் இருந்த சாஷா திடீரென காணாமல் போனது. இதனால் சோகத்துக்கு ஆளான விக்டர் போலீசில் புகார் அளித்து தனது பூனையை தேடினார். ஆனாலும் பூனை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தொலைந்து போய் 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் நியூ மெக்சிகோவின் சாண்டா பி நகரில் சாஷா இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. பூனையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்ததன் மூலம் அதன் உரிமையாளரான விக்டரின் வசிப்பிடத்தை அறிந்த உள்ளூர் வன விலங்குகள் காப்பகம் அவரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தது.

    அதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு அந்த பூனை விமானம் மூலம் சாண்டா பி நகரில் இருந்து போர்ட்லேண்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் சாஷா தனது உரிமையாளருடன் சேர்ந்தது. தனது பூனை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மீண்டும் சாஷாவுடன் இணைந்தது வியப்பளிப்பதாக விக்டர் கூறினார்.
    Next Story
    ×