என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூர் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்20 Nov 2019 4:00 AM GMT (Updated: 20 Nov 2019 4:00 AM GMT)
சிங்கப்பூரில் உள்ள போர் நினைவிடத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
சிங்கப்பூர்:
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட்டை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
இந்நிலையில், சிங்கப்பூரின் கிராஞ்சியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப்போரின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில், தனது கருத்தை பதிவிட்டு கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை மந்திரிகளின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X