என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முன்னாள் துணை ஜனாதிபதி மீது அவதூறு: டிரம்ப் மீதான விசாரணை தொடங்கியது
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டெனால்டு டிரம்ப் இருக்கிறார். அங்கு அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடக்கிறது.
இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். எதிர்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜோபிடன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் திட்டமிட்ட தகவல் வெளியாகி இருந்தது.
ஜோபிடன் மற்றும் அவரது மகன் ஹன்ட்டர்ஸ் குறித்து அவதூறு பரப்ப உதவுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. உக்ரைன் அதிபருடன் அவர் தொலைபேசியில் பேசிய விவரத்தை அமெரிக்க அதிபர் மாளிகையைச் சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்.
இதையடுத்து டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. பாராளுமன்ற உளவு கமிட்டி இதன் மீதான விசாரணையை தொடங்கியது.
முதல் முறையாக இந்த விசாரணை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்