search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கிச்சூடு நடந்த கல்லூரி
    X
    துப்பாக்கிச்சூடு நடந்த கல்லூரி

    ரஷியா- கல்லூரி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

    ரஷியாவில் கல்லூரி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.
    மாஸ்கோ:

    ரஷியாவின் பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். 

    இந்த துப்பாக்கிச் சூட்டில் உடன் பயின்ற மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், அந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். இதில் மேலும் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
    Next Story
    ×