search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் குண்டு வெடித்த பகுதி
    X
    கார் குண்டு வெடித்த பகுதி

    ஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார்குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர். ராணுவமும் காவல்துறையும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

    இந்நிலையில், தலைநகர் காபூல் காசிம் தெருவில் இன்று காலை கார்குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பயங்கரவாதிகள் காரில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். 

    இந்த தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
    Next Story
    ×