என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
Byமாலை மலர்5 Nov 2019 2:43 PM GMT (Updated: 5 Nov 2019 2:43 PM GMT)
அரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோ நகரில் இன்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாஸ்கோ:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது வெளிநாட்டு பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று ரஷியா வந்தடைந்தார்.
நாளை (6-ம் தேதி) இங்கு நடைபெறும் 19-வது இந்தியா-ரஷியா ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையேற்றும் ராஜ்நாத் சிங், முன்னதாக ரஷியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி மற்றும் ராணுவ மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங் ‘மகாத்மாவின் 150-வது பிறந்தநாளை உலகம் கொண்டாடி வரும் இவ்வேளையில் அவர் தனது வாழ்க்கையில் கடைபிடித்த கொள்கைகளையும் காந்தீய சிந்தனைகளையும் முன்னோடியாக பின்பற்றி, இந்த பூமியில் அமைதியும் நீடித்த முன்னேற்றமும் ஏற்பட நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது வெளிநாட்டு பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று ரஷியா வந்தடைந்தார்.
நாளை (6-ம் தேதி) இங்கு நடைபெறும் 19-வது இந்தியா-ரஷியா ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையேற்றும் ராஜ்நாத் சிங், முன்னதாக ரஷியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி மற்றும் ராணுவ மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், தாஷ்கண்ட் நகரில் இருந்து விமானம் மூலம் இன்று ரஷியா தலைநகர் மாஸ்கோ வந்தடைந்த ராஜ்நாத் சிங், இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தார்.
தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங் ‘மகாத்மாவின் 150-வது பிறந்தநாளை உலகம் கொண்டாடி வரும் இவ்வேளையில் அவர் தனது வாழ்க்கையில் கடைபிடித்த கொள்கைகளையும் காந்தீய சிந்தனைகளையும் முன்னோடியாக பின்பற்றி, இந்த பூமியில் அமைதியும் நீடித்த முன்னேற்றமும் ஏற்பட நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X