என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு
Byமாலை மலர்2 Nov 2019 9:47 AM GMT (Updated: 2 Nov 2019 9:47 AM GMT)
இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதை தொடர்ந்து அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித்பிரேமதாசா மற்றும் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனா நாயக், தமிழர் கட்சியை சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.
இருந்தும் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருவது என இலங்கை சுதந்திர கட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் அதற்கு மாறாக முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்று ஒப்பந்தம் செய்தார். இது இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரிகாவின் இத்தகைய நடவடிக்கைக்கு அவரது கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட சந்திரிகா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் ஆலோசகர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே கோத்தபய ரரஜபக்சே தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படும். சர்வதேச நாடுகளுடன் ஆன நல்லுறவு மேம்படுத்தப்படும். தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதை தொடர்ந்து அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித்பிரேமதாசா மற்றும் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனா நாயக், தமிழர் கட்சியை சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.
இருந்தும் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருவது என இலங்கை சுதந்திர கட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் அதற்கு மாறாக முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்று ஒப்பந்தம் செய்தார். இது இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரிகாவின் இத்தகைய நடவடிக்கைக்கு அவரது கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட சந்திரிகா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் ஆலோசகர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே கோத்தபய ரரஜபக்சே தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படும். சர்வதேச நாடுகளுடன் ஆன நல்லுறவு மேம்படுத்தப்படும். தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X