என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் கட்டுமான பணியின்போது விபத்து- 8 பேர் பலி
Byமாலை மலர்29 Oct 2019 8:39 AM GMT (Updated: 29 Oct 2019 8:39 AM GMT)
சீனாவில் கட்டுமான பணிகளின் போது கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
பீஜிங்:
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது குயாங் மாகாணம். இம்மாகாணத்தில் உள்ள குவான்ஷு மாவட்டத்தில் தரைத்தளத்தின் கீழ் கார் பார்க்கிங் கட்டும் பணி நடைபெற்று வந்தது. நேற்று மாலை வேளையில் சுமார் 14 ஊழியர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 14 நபர்களில் மூவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர். ஒருவரை மீட்புப்படையினர் உடனடியாக மீட்டனர். மீதமுள்ள 10 பேர் இடிபாடுகளில் முழுவதுமாக சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் மீட்புப்பணிகள் தாமதம் ஆகின. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இறந்த நிலையில் 8 பேரின் உடல்களை கண்டெடுத்தனர், மேலும் இரண்டு பணியாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X