என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி
Byமாலை மலர்28 Oct 2019 2:47 AM GMT
கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர்.
போகோடா:
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்பட்டது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் அல்பன் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கொலாம்பியா அதிபர் பயணிக்க அவ்வப்போது உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X