என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 42 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்26 Oct 2019 7:36 PM GMT (Updated: 26 Oct 2019 7:36 PM GMT)
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் பலியானார்கள்.
பாக்தாத்:
ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமையன்று அமைதியாக போராட்டம் தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் இந்த போராட்டம், வன்முறை போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்களுக்கு தீ வைக்கின்றனர். படைப்பிரிவு அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இந்த வன்முறையில் ஒரே நாளில் 42 பேர் பலியாகினர் என நேற்று வெளியான தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் 12 பேர் திவானியாஹ் நகரில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 30 பேர் பிற இடங்களில் பலியாகி இருக்கின்றனர்.
பலியான 42 பேரில் 30 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மற்றொரு தகவல் கூறுகிறது. தென் மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஈராக்கில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த போராட்டங்களில் 157 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது. ஈராக்கில் வன்முறையில் மக்கள் பலியாகி வருவதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், கணிசமான மனித உரிமை மீறல்களால்தான் ஈராக்கில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. அப்பாவி மக்கள் பலியாவதற்கு மிகுந்த வேதனை அடைகிறோம்” என்று கூறினார்.
ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமையன்று அமைதியாக போராட்டம் தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் இந்த போராட்டம், வன்முறை போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்களுக்கு தீ வைக்கின்றனர். படைப்பிரிவு அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இந்த வன்முறையில் ஒரே நாளில் 42 பேர் பலியாகினர் என நேற்று வெளியான தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் 12 பேர் திவானியாஹ் நகரில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 30 பேர் பிற இடங்களில் பலியாகி இருக்கின்றனர்.
பலியான 42 பேரில் 30 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மற்றொரு தகவல் கூறுகிறது. தென் மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஈராக்கில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த போராட்டங்களில் 157 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது. ஈராக்கில் வன்முறையில் மக்கள் பலியாகி வருவதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், கணிசமான மனித உரிமை மீறல்களால்தான் ஈராக்கில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. அப்பாவி மக்கள் பலியாவதற்கு மிகுந்த வேதனை அடைகிறோம்” என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X