search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    உகாண்டா - லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி

    உகாண்டாவில் கரும்புகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    கம்பாலா:

    உகாண்டா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஜிஞ்ஜா மாவட்டம். இந்த மாவட்டத்தில் நேற்று இரவு கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உகாண்டாவில் ஓவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 ஆயிரம் விபத்துக்கள் நடக்கின்றன. அதில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என அங்கிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×