என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உகாண்டா - லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி
Byமாலை மலர்22 Oct 2019 2:02 PM GMT (Updated: 22 Oct 2019 2:02 PM GMT)
உகாண்டாவில் கரும்புகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கம்பாலா:
உகாண்டா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஜிஞ்ஜா மாவட்டம். இந்த மாவட்டத்தில் நேற்று இரவு கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உகாண்டாவில் ஓவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 ஆயிரம் விபத்துக்கள் நடக்கின்றன. அதில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என அங்கிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X