search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி
    X
    குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி

    ஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

    ஆப்கானிஸ்தானில் பகல் தொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
    காபூல்: 

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டம் உள்ளது. இம்மாவட்டதின் ஜா தரா பகுதியில் உள்ள   மசூதிக்கு வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம்போல் மக்கள் தொழுகைக்கு சென்றனர். 

    தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 20 பேர்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.  

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்நிலையில், மசூதியில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×