என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு
Byமாலை மலர்16 Oct 2019 8:37 PM GMT (Updated: 16 Oct 2019 8:37 PM GMT)
நெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேரை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் டிரென்தி மாகாணத்தில் ருய்னர்வோல்ட் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு 25 வயது வாலிபர் ஒருவர் வந்தார். அவர் நீளமான தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் காட்டுவாசி போல இருந்தார். மேலும் அவர் மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டார்.
அவர் மதுபான விடுதியில் இருந்தவர்களிடம், தான் கடந்த 9 ஆண்டுகளாக வெளியுலகத்தை பார்க்கவில்லை என்றும் பண்ணை வீட்டின் பாதாள அறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி உதவி கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். பின்னர் அவரை அழைத்து கொண்டு அவர் சொன்ன முகவரிக்கு சென்றனர். அங்கு வயல்வெளிக்கு மத்தியில் பண்ணை வீடு ஒன்று இருந்தது. அந்த பண்ணை வீட்டில் நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் அடித்தளத்தில் இருந்த ஒரு பாதாள அறையில் முதியவர் ஒருவரும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட அவரது 5 மகன்களும் இருந்தனர். மதுபான விடுதிக்கு வந்தது முதியவரின் மூத்த மகன் என தெரிந்தது. இவர்கள் 7 பேரும் பண்ணையில் விளைந்த காய்கறிகள் மற்றும் ஆட்டு இறைச்சியை மட்டுமே சாப்பிட்டு 9 ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 58 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், 7 பேரும் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் டிரென்தி மாகாணத்தில் ருய்னர்வோல்ட் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு 25 வயது வாலிபர் ஒருவர் வந்தார். அவர் நீளமான தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் காட்டுவாசி போல இருந்தார். மேலும் அவர் மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டார்.
அவர் மதுபான விடுதியில் இருந்தவர்களிடம், தான் கடந்த 9 ஆண்டுகளாக வெளியுலகத்தை பார்க்கவில்லை என்றும் பண்ணை வீட்டின் பாதாள அறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி உதவி கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். பின்னர் அவரை அழைத்து கொண்டு அவர் சொன்ன முகவரிக்கு சென்றனர். அங்கு வயல்வெளிக்கு மத்தியில் பண்ணை வீடு ஒன்று இருந்தது. அந்த பண்ணை வீட்டில் நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் அடித்தளத்தில் இருந்த ஒரு பாதாள அறையில் முதியவர் ஒருவரும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட அவரது 5 மகன்களும் இருந்தனர். மதுபான விடுதிக்கு வந்தது முதியவரின் மூத்த மகன் என தெரிந்தது. இவர்கள் 7 பேரும் பண்ணையில் விளைந்த காய்கறிகள் மற்றும் ஆட்டு இறைச்சியை மட்டுமே சாப்பிட்டு 9 ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 58 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், 7 பேரும் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X