என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய ஹகிபிஸ் புயல்- பலி எண்ணிக்கை 70-ஐ நெருங்கியது
Byமாலை மலர்15 Oct 2019 4:13 AM GMT (Updated: 15 Oct 2019 4:13 AM GMT)
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளது.
டோக்கியோ:
பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலைத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் மழையால் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் வசித்த மக்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புயலால் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் வெளியான தகவலின்படி, ஹகிபிஸ் புயல் மற்றும் புயல் தொடர்பான விபத்துகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளதாக தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 பேரைக் காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலைத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் மழையால் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் வசித்த மக்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புயலால் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் வெளியான தகவலின்படி, ஹகிபிஸ் புயல் மற்றும் புயல் தொடர்பான விபத்துகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளதாக தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 பேரைக் காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X