என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
Byமாலை மலர்11 Oct 2019 10:08 AM GMT (Updated: 11 Oct 2019 10:08 AM GMT)
சீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஷாங்காய்:
சீனாவின் ஜியாங்சு மாகாணம் வூக்சி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பிசியாக காணப்படும். இந்த நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற 3 கார்கள், 2 லாரிகளும் கீழே விழுந்தன. பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் அந்த வாகனங்கள் நசுங்கின.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாலம் இடிந்து விழுந்தபோது குறைந்த அளவு வாகனங்கள் சென்றதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவின் ஜியாங்சு மாகாணம் வூக்சி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பிசியாக காணப்படும். இந்த நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற 3 கார்கள், 2 லாரிகளும் கீழே விழுந்தன. பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் அந்த வாகனங்கள் நசுங்கின.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாலம் இடிந்து விழுந்தபோது குறைந்த அளவு வாகனங்கள் சென்றதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X