என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் - டிரம்ப் கணிப்பு
Byமாலை மலர்10 Oct 2019 7:37 PM GMT (Updated: 10 Oct 2019 7:37 PM GMT)
தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர் மகன் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, உக்ரைன் நாட்டு அதிபரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியினர் நடத்தும் இந்த விசாரணை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி பதவி நீக்க விசாரணையை புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என டிரம்ப் கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது (பதவி நீக்க விசாரணை) அனேகமாக மிகப்பெரிய சுப்ரீம் கோர்ட்டு வழக்காக மாறி முடிவடையும். அது என்னையும், எனது குடியரசு கட்சியையும் ஜனநாயக கட்சியினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கும்” என கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர் மகன் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, உக்ரைன் நாட்டு அதிபரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியினர் நடத்தும் இந்த விசாரணை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி பதவி நீக்க விசாரணையை புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என டிரம்ப் கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது (பதவி நீக்க விசாரணை) அனேகமாக மிகப்பெரிய சுப்ரீம் கோர்ட்டு வழக்காக மாறி முடிவடையும். அது என்னையும், எனது குடியரசு கட்சியையும் ஜனநாயக கட்சியினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கும்” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X