என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இருதரப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்: காஷ்மீர் பிரச்சினை பற்றி சீனா கருத்து
Byமாலை மலர்9 Oct 2019 2:12 AM GMT (Updated: 9 Oct 2019 2:12 AM GMT)
காஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் கூறியுள்ளார்.
பீஜிங் :
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனாவுக்கு சென்றார். இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவும், சீனாவும் மேல்மட்டத்தில் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாரம்பரியம் கொண்ட நாடுகள். உயர்மட்டத்தில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. இரு நாடுகளும் வளர்ந்து வரும் பெரிய நாடுகள். இருதரப்பு உறவு நல்லமுறையில் வளர்ச்சி கண்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. தீர்மானம் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று முன்பு ஒருமுறை சீனா தெரிவித்தது. ஆனால், அந்த நிலைப்பாட்டை தற்போது கைவிட்டு விட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனாவுக்கு சென்றார். இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவும், சீனாவும் மேல்மட்டத்தில் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாரம்பரியம் கொண்ட நாடுகள். உயர்மட்டத்தில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. இரு நாடுகளும் வளர்ந்து வரும் பெரிய நாடுகள். இருதரப்பு உறவு நல்லமுறையில் வளர்ச்சி கண்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. தீர்மானம் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று முன்பு ஒருமுறை சீனா தெரிவித்தது. ஆனால், அந்த நிலைப்பாட்டை தற்போது கைவிட்டு விட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X