என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கி விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 9 பேர் பலி
Byமாலை மலர்8 Oct 2019 5:14 PM GMT (Updated: 8 Oct 2019 5:14 PM GMT)
ஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்:
ஈராக்கில் உள்ள குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஷ்தான் போராளிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.
இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஈராக் நாட்டின் ஹாக்ருக் மற்றும் ஹெப்டென் ஆகிய பகுதிகளில் உள்ள குர்திஷ்தான் போராளிகளை குறிவைத்து துருக்கி நாட்டின் விமானப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 குர்திஸ் போராளிகள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X