search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலந்து வெளியிட்ட தபால் தலை
    X
    போலந்து வெளியிட்ட தபால் தலை

    போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டின் தபால் துறை காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
    வார்சா:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில் காந்தியின் சிலையை நேபாளத்துக்கான இந்திய தூதர் மன்ஜிவ் சிங் பூரி திறந்து வைத்தார். சீனாவின் இந்திய தூதரகத்தில் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    மகாத்மா காந்தி சிறப்பு தபால் தலை

    பாலஸ்தீனத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை போலந்து நாட்டின் தபால் சேவை நிறுவனமான போக்ஸ்டா போல்க்ஸா, மகாத்மா காந்தியின் உருவப்படத்தைக் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.

    பிரான்ஸ், உஸ்பெகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×