என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 பயங்கரவாதிகள் பலி
Byமாலை மலர்3 Oct 2019 1:59 PM GMT (Updated: 3 Oct 2019 1:59 PM GMT)
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும், தங்களுக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் உள்நாட்டுப்படைகளும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அரசுப்படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. மேலும், பங்கரவாதிகள் ராணுவம் மற்றும் பொது மக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தஹேர் மாகணத்தில் உள்ள பஹராக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த திடீர் தேடுதல் வேட்டையில் மறைவிடத்தில் பதுங்கியிருந்த 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X