என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிடாக் புயல் எதிரொலி - ஜப்பானில் 43000 மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்3 Oct 2019 9:29 AM GMT (Updated: 3 Oct 2019 9:29 AM GMT)
மிடாக் புயல் காரணமாக ஜப்பானில் கனமழை பெய்து வரும் நிலையில், 43,000 மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ:
மிடாக் புயல் காரணமாக, ஜப்பான் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உ ருவாகி, கனமழை பெய்து வருகிறது. கனமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொச்சி மாகாணத்தில் 43000 மக்கள் ஊரைவிட்டு வெளியேறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் தகவலின் படி, கொச்சி, டோசா மற்றும் சுசாகி ஆகிய நகரங்களில் 120 மில்லிமீட்டர் (12 செமீ) மழை பதிவானது, மேலும் கார்கள் மூழ்கும் அளவிற்கு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
கனமழை காரணமாக ஏற்படும் நிலச்சரிவு , வெள்ளம் தொடர்பான விபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜப்பான் அரசு எடுத்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X