search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரிப் படம்
    X
    மாதிரிப் படம்

    வங்காள தேசத்தில் படகு விபத்து - 10 பேர் பலி

    வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    தாகா:

    வங்காளதேசம் நாட்டின் சுனம்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள டெராய் பகுதியில் சர்மா ஆறு உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரு கிராமத்தில் இருந்து மசிம்பூர் கிராமத்திற்கு 30 பயணிகளுடன் விசைப்படகு ஒன்று நேற்று இரவு சென்றது.

    கலியாகோதா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காற்று அதிகமாக வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமானதால் படகு நீரில் மூழ்கி கவிழ்ந்தது. 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×