என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் - ஈரான் அதிபர் கவலை
Byமாலை மலர்22 Sep 2019 10:36 AM GMT (Updated: 22 Sep 2019 10:36 AM GMT)
வளைகுடா பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு வெளிநாட்டு சக்திகள் பிரச்சனைகளை உருவாக்கி, பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.
டெஹ்ரான்:
இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என சவுதி அரசும் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகின்றன.இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு சக்திகள் இங்கு காலூன்றினால், வளைகுடா பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கி பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ராணுவத்தின் ஆண்டுவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய ரவுகானி, ‘உங்களது (வெளிநாட்டு சக்திகளின்) வருகை இந்த பிராந்தியத்துக்கு வலியையும் சோகத்தையும்தான் எப்போதும் தந்துள்ளது.
எங்களது பிராந்தியம் மற்றும் நாடுகளிடம் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்களோ.., அந்த அளவுக்கு எங்கள் பிராந்தியம் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நேரத்தில் எங்களது நட்பு மற்றும் சகோதரத்துவ கரங்களை நீட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என அண்டை நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா நாட்டிலுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் கிணறு ஆகியவற்றின்மீது கடந்த 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால், சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி சரிபாதியாக குறைந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என சவுதி அரசும் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகின்றன.இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு சக்திகள் இங்கு காலூன்றினால், வளைகுடா பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கி பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ராணுவத்தின் ஆண்டுவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய ரவுகானி, ‘உங்களது (வெளிநாட்டு சக்திகளின்) வருகை இந்த பிராந்தியத்துக்கு வலியையும் சோகத்தையும்தான் எப்போதும் தந்துள்ளது.
எங்களது பிராந்தியம் மற்றும் நாடுகளிடம் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்களோ.., அந்த அளவுக்கு எங்கள் பிராந்தியம் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நேரத்தில் எங்களது நட்பு மற்றும் சகோதரத்துவ கரங்களை நீட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என அண்டை நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X