search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
    X
    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

    இந்தோனேசியாவின் ஜாவா, பாலி தீவுகளை உலுக்கிய நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு

    இந்தோனேசியாவில் இன்று 2 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. எனவே, எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஜாவா தீவிலும், அடுத்து பாலி தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது. மேலும் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறினர்.

    நிலநடுக்கத்தினால் பாலியில் உள்ள ஒரு கோவில் சேதமடைந்துள்ளது.  பெரிய அளவிலான சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. 
    Next Story
    ×