என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2022-ல் விண்வெளிக்கு மனிதரை அனுப்புவோம்: பாகிஸ்தான் மந்திரி
Byமாலை மலர்16 Sep 2019 12:10 PM GMT (Updated: 16 Sep 2019 12:10 PM GMT)
விண்வெளிக்கு பாகிஸ்தான் வரும் 2022-ம் ஆண்டு மனிதரை அனுப்பி வைக்கும் என அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்தை இஸ்ரோ வரும் 2022ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஃபவாத் சௌத்ரி கூறியதாவது:
பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. விண்வெளி செல்லும் வீரருக்கான முதல் கட்ட தேர்வு 2020-ம் ஆண்டு நடத்தப்பட்டு 50 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
பின்னர் 2022-ல் அவர்களில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். அவர்களில் இறுதியாக ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார். இந்த பணியில் பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X