search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிப்பு படம்
    X
    சித்தரிப்பு படம்

    ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு இடையில் துப்பாக்கி சண்டை - 9 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் போலீசாருக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பேர் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டம், தமானி என்ற இடத்தில் நேற்றிரவு இரு போலிசார் தங்களுடன் பணியாற்றும் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் படுகாயமடைந்த 9 போலீசார் பரிதாபம்மாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    கடந்த ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில் இதே மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போலீசார் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×