search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி
    X
    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி

    காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீடு அவசியம்: பாகிஸ்தான்

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும் மூன்றாவது நாடு ஒன்று தலையிட்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    ஜெனிவா:

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டத்தில் காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியது. 

    பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, காஷ்மீர் எங்கள் நாட்டின் உள்விவகாரம் எனவும் அதில் பிறர் தலையிடுவதை விரும்பவில்லை என பதிலடி கொடுத்தது. இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ஐ.நா. தலைமை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சுவிஸ்சர்லாந்தில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ''ஐரோப்பிய நாடுகளுக்கு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இது குறித்து குரல் எழுப்ப மறுக்கிறார்கள்.

    காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்களது முயற்சிகளுக்கு எந்த விதமான நேர்மறை பதில்களையும் அளிக்கவில்லை. 

    இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தற்போது சாதகமான சூழல் இல்லை. மேலும், மூன்றாவது நபர் ஒருவர் இந்த விவகாரத்தை தலையிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படும்” என கூறினார். 

    காஷ்மீர் விவகாரத்தில் சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      

    Next Story
    ×