என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்: பாகிஸ்தான் மந்திரி குரேஷி
Byமாலை மலர்11 Sep 2019 2:07 AM GMT (Updated: 11 Sep 2019 2:07 AM GMT)
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஜெனீவா :
காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றே பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்ற குரேஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி உலகத்தை நம்ப வைக்க இந்தியா முயற்சி செய்கிறது. உண்மையிலேயே அங்கு இயல்புநிலை திரும்பி இருந்தால், சர்வதேச ஊடகங்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினரை இந்திய மாநிலமான (இந்தியாவின் ஒரு பகுதி) ஜம்மு-காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்?. அவர்களை அனுமதித்தால் உண்மை நிலை தெரிந்து விடும்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய குரேஷி, காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றே பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்ற குரேஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி உலகத்தை நம்ப வைக்க இந்தியா முயற்சி செய்கிறது. உண்மையிலேயே அங்கு இயல்புநிலை திரும்பி இருந்தால், சர்வதேச ஊடகங்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினரை இந்திய மாநிலமான (இந்தியாவின் ஒரு பகுதி) ஜம்மு-காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்?. அவர்களை அனுமதித்தால் உண்மை நிலை தெரிந்து விடும்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய குரேஷி, காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X