search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்
    X
    மெட்ரோ ரெயில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்

    இங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்

    இங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர் பற்றிய நிகழ்வு பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்தனர்.

    ரெயில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா தான் கொண்டு வந்திருந்த வாளியில் தண்ணீரை ஊற்றி சோப்புப்பொடி போட்டு துணிகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித குழப்பத்துடனும் பார்த்தனர்.

    அதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின் மென்சா, துணிகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர் சகஜமாக அமர்ந்து கொண்டார்.

    எல்வின் மென்சாவின் இந்த செயல் பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகுதான் எல்வின் மென்சா, ‘பிராங்’ எனப்படும் டி.வி. நிகழ்ச்சிக்காக இப்படி செய்தது தெரியவந்தது.
    Next Story
    ×