என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரிய எல்லையை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்7 Sep 2019 2:37 PM GMT (Updated: 7 Sep 2019 2:37 PM GMT)
தென்கொரிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாதுகாப்பு மந்திரி ராஜ்நாந் சிங் வடகொரியா எல்லையை பார்வையிட்டார்.
சியோல்:
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் லீ நக்-யோனை ராஜ்நாத் சிங் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, ராணுவ கட்டமைப்பை வலுபடுத்துதல் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தனது பயணத்தின் இறுதி நாளான இன்று ராஜ்நாத் சிங் வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகளின் முக்கிய எல்லையான பான்முஞ்ஜோம் பகுதியை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, 2018-ம் ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் இணைந்து நடவு செய்த மரத்தையும் பார்வையிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X