search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வெளிநாடு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

    அவரது வெளிநாட்டு பயணத்துக்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை  அதிகாரிகள் அனுமதி கேட்டனர். 

    இந்நிலையில், இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது என வெளியுறவு துறை மந்திரி குரேஷி தெரிவித்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியை மூடி வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×