என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டொரியன் புயல் கோரத்தாண்டவம்- பகாமாசில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
Byமாலை மலர்6 Sep 2019 4:50 AM GMT (Updated: 6 Sep 2019 4:50 AM GMT)
பகாமாஸ் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய டொரியன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்கோ:
கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
இந்த புயல் மழைக்கு 7 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 20 பேர் வரை இறந்தது உறுதி செய்யப்பட்டது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை பிரதமர் ஹூபர்ட் மின்னிஸ் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
புயல் பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 70 ஆயிரம் பேருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. கூறி உள்ளது.
தற்போது டொரியன் புயலானது, இரண்டாம் வகை புயலாக மாறி, அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவை தாக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
இந்த புயல் மழைக்கு 7 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 20 பேர் வரை இறந்தது உறுதி செய்யப்பட்டது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை பிரதமர் ஹூபர்ட் மின்னிஸ் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
புயல் பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 70 ஆயிரம் பேருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. கூறி உள்ளது.
தற்போது டொரியன் புயலானது, இரண்டாம் வகை புயலாக மாறி, அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவை தாக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X