என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் மீண்டும் ஜனாதிபதியானால் வர்த்தக ஒப்பந்தம் கடினம் ஆகிவிடும்- சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Byமாலை மலர்5 Sep 2019 2:39 AM GMT (Updated: 5 Sep 2019 2:39 AM GMT)
அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என டிரம்ப், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் :
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா-சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது.
இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை வெற்றி அடையாத காரணத்தால், நிலைமை மோசமாகியுள்ளது. அண்மையில், ரூ.7¾ லட்சம் கோடி மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என டிரம்ப், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் சீனாவோ அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் அதுவரை காத்திருக்கும் பட்சத்தில், சீனாவின் வேலைவாய்ப்புகளும், நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஒருவேளை மீண்டும் நான் ஜனாதிபதியாக தேர்வாகும் பட்சத்தில், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது மிகவும் கடினமானதாகி விடும்” என கூறினார்.
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா-சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது.
இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை வெற்றி அடையாத காரணத்தால், நிலைமை மோசமாகியுள்ளது. அண்மையில், ரூ.7¾ லட்சம் கோடி மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என டிரம்ப், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் சீனாவோ அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் அதுவரை காத்திருக்கும் பட்சத்தில், சீனாவின் வேலைவாய்ப்புகளும், நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஒருவேளை மீண்டும் நான் ஜனாதிபதியாக தேர்வாகும் பட்சத்தில், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது மிகவும் கடினமானதாகி விடும்” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X