search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் பிரதமர் லீ நக்-யோன் உடன் ராஜ்நாத் சிங்
    X
    ஜப்பான் பிரதமர் லீ நக்-யோன் உடன் ராஜ்நாத் சிங்

    தென் கொரிய பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

    தென் கொரியா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு பிரதமர் லீ நக்-யோனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சியோல்:

    ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தென்கொரியா சென்றுள்ளார். தலைநகர் சியோலில் அந்நாட்டு பிரதமர் லீ நக்-யோனை ராஜ்நாத் சிங் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கொரியாவை ஒருமுறை 'கிழக்கின் ஒளி' என வர்ணித்தார். அவரது கூற்றுப்படி தென்கொரியா எப்போதும் கிழக்கின் ஒளியாகவே இருக்கும். 

    மேலும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தென்கொரியா மேற்கொண்டுவரும் முயற்சிகளை இந்தியா சார்பில் பாராட்டுவதாக ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  
    Next Story
    ×