என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் பெய்த கனமழைக்கு இருவர் பலி - 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு
Byமாலை மலர்29 Aug 2019 12:46 PM GMT (Updated: 29 Aug 2019 12:46 PM GMT)
ஜப்பானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு மாகாணம் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற நிகழ்வுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X