என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்சில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி- 245 பேர் மீட்பு
Byமாலை மலர்28 Aug 2019 4:35 PM GMT (Updated: 28 Aug 2019 4:35 PM GMT)
பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 245 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய நாடு. இதனால் கடல் வழி போக்குவரத்து மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்நாட்டின் சிபு தீவு நகரில் இருந்து மற்றொரு தீவு நகரான டபிடன் நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை படகு ஒன்று சென்றது. அதில் படகு ஊழியர்கள் உள்பட 248 பயணிகள் சென்றனர்.
இந்நிலையில், நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது இரவு 11 மணியளவில் படகின் எஞ்சின் அறையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென படகின் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவியதால் அதில் பயணம் செய்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
தகவல் அறிந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடலோர காவல்படை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 245 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த படகில் வேறு யாராவது சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X