என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்டோபர் 14ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றம் முடக்கம் - ராணி எலிசபெத் ஒப்புதல்
Byமாலை மலர்28 Aug 2019 2:52 PM GMT (Updated: 28 Aug 2019 2:52 PM GMT)
பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
லண்டன்:
ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது.
வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என சமீபத்தில் பொறுப்பேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபெத்துக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று ராணி எலிசபெத், பிரிட்டன் பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X