என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் 37 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
Byமாலை மலர்28 Aug 2019 11:42 AM GMT (Updated: 28 Aug 2019 11:42 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்டிகா மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஷாரன்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்டிக் மாகாணத்தில் உள்ள மதா கான் மற்றும் சம்ரத் மாவட்டங்களை இணைக்கும் சாலையில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை தலிபான் தீவிரவாதிகள் நேற்று இரவு தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பு படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் தலிபானின் முக்கிய கமாண்டரான மூசா கான் என்பவரும் அடங்குவார்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஏழு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் பயங்கரவாதிகள், பாக்டிகா மாகாணத்தில் உள்ள மலைப்பிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர், கரடுமுரடான நிலப்பரப்புகளையும் மலைகளையும் மறைவிடங்களாகப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அடிக்கடி தாக்குதல்களை நடத்துகிறார்கள் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X