என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்பெயின் நாட்டில் ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது - விமானி பலி
Byமாலை மலர்27 Aug 2019 8:02 PM GMT (Updated: 27 Aug 2019 8:02 PM GMT)
ஸ்பெயின் நாட்டில் ராணுவ விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான மரசியா மாகாணத்தில், கடற்கரை நகரமான லா மங்காவில் இருந்து, ‘சி-101’ ரக ராணுவ விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஒரே ஒரு விமானி மட்டும் இருந்தார். இந்த விமானம் அங்குள்ள கடற்கரைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானி பலியானார். இதற்கிடையில் கடற்கரையில் இருந்த சிலர் விமானம் கடலுக்குள் விழும் காட்சியை செல்போன்களில் ‘வீடியோ’ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விமான விபத்தை தொடர்ந்து, அங்குள்ள 3 கடற்கரைகள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான மரசியா மாகாணத்தில், கடற்கரை நகரமான லா மங்காவில் இருந்து, ‘சி-101’ ரக ராணுவ விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஒரே ஒரு விமானி மட்டும் இருந்தார். இந்த விமானம் அங்குள்ள கடற்கரைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானி பலியானார். இதற்கிடையில் கடற்கரையில் இருந்த சிலர் விமானம் கடலுக்குள் விழும் காட்சியை செல்போன்களில் ‘வீடியோ’ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விமான விபத்தை தொடர்ந்து, அங்குள்ள 3 கடற்கரைகள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X