search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் அரசு எழுதிய கடிதம்
    X
    ஆப்கானிஸ்தான் அரசு எழுதிய கடிதம்

    எல்லையில் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்- நடவடிக்கை எடுக்க ஐ.நா.வுக்கு ஆப்கன் கடிதம்

    எல்லையில் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரங்களில் உள்ள நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியதாவது:

    எல்லையில் தாக்குதல் நடத்தும் வீரர்கள்

    ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள நகரங்களின் மீது பாகிஸ்தான் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை வரை சென்று மூக்குடைப்பட்ட பாகிஸ்தானுக்கு, ஆப்கானிஸ்தான் எழுதிய கடிதம் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×