search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி
    X
    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என பாகிஸ்தான் அதிபர்ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி கனடா-அமெரிக்க ஊடகத்துக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவுகளை அரசியலமைப்பில் இருந்து நீக்கி விட்டதனால் அங்கு நிலைமை மேம்படும் என்று இந்தியா நினைத்தால், இந்திய அரசாங்கம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசித்து வருகிறது என்று அர்த்தம்.

    இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொண்டு இந்தியா உண்மையில் பயங்கரவாதத்தினை ஊக்குவித்துள்ளது.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடி வருகிறது.

    நீண்ட காலத்திற்கு பின் இந்த விவகாரம் சர்வதேச அளவிற்கு சென்றுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை இந்தியா தவிர்த்து விட்டது. இந்த விவகாரம் சுமூக முறையில் தீர்க்கப்பட பாகிஸ்தானுடன் அமர்ந்து பேசுவதற்கும் இந்தியா மறுத்து விட்டது.

    பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா நடத்தக்கூடிய சாத்தியம் உள்ளது.  ஆனால் போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை.  இந்தியா போரை தொடங்கினால், எங்களை தற்காத்து கொள்வதென்பது எங்களது உரிமை என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×