என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு
Byமாலை மலர்24 Aug 2019 2:27 AM GMT (Updated: 24 Aug 2019 2:27 AM GMT)
சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
இந்நிலையில், சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுவிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹமூத் குரேஷி இதை தெரிவித்தார். “இந்தியாவுடன் பதற்றம் இருந்தாலும், கர்தார்பூர் பாதையை திறந்துவிட்டு, சீக்கிய பக்தர்களை வரவேற்க தயார்” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
இந்நிலையில், சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுவிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹமூத் குரேஷி இதை தெரிவித்தார். “இந்தியாவுடன் பதற்றம் இருந்தாலும், கர்தார்பூர் பாதையை திறந்துவிட்டு, சீக்கிய பக்தர்களை வரவேற்க தயார்” என்று அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X