search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதி
    X
    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதி

    சீனாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

    சீன நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
    பெய்ஜிங்:

    சீன நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அந்நாட்டின் வென்சுவான், சிச்சுவான் போன்ற மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

    மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபடும் காட்சி

    இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 26 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×