என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி
Byமாலை மலர்20 Aug 2019 5:21 PM GMT (Updated: 20 Aug 2019 5:21 PM GMT)
காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு அனைத்தையும் துண்டித்தது.
இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபையில் விவாதிக்க சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. அந்த முயற்சி ஐ.நா சபையில் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளதை எதிர்த்து பாகிஸ்தான் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட கொள்கை ரீதியில் முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X